அவள் வெள்ளைச்சிரிப்பில் வெண்மதி வலுவிழந்து ....
ராத்திரிச்சாலை ரசியமாயி நழுவிக்கொண்டிருந்தது ...
அது ஒரு ரயில் பிரயாணம் ,
அவளை கண்டதும் கனவுகள் என்னை தலுவிக்கொண்டிருந்தது ........
ஓடும் ரயிலில் என் ஓரப்பார்வை ......
தன் தங்கையோடு சில்லறை முத்தங்களிட்டுக்கொடிருந்த ஒரு சிவந்த மங்கை அவள் ..........
தூக்கம் தொலைந்தது போன அந்த இரவில் எனக்குள் துடினமாயி அரங்கேறிய கனவுகள் ஏராளம் ......
அவள் விழிகளை பார்த்து பார்த்து என் இருதயம் மௌன வாசகம் வரைந்துகொண்டிருந்தது ....
அவள் முகத்திரைக்கெதிரில் என் முழு விம்பம் அழிந்துகொண்டிருந்தது ......
என் விழிகளை பாழ்படுத்திய பருவ மங்கையவள் .......
....க.வி.முஃஸின் ....
Wednesday 11 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment