Tuesday, 19 January 2010

மலர்ந்த புது வருடத்தில் ஒரு மல்லிகை வாசனை ..........2010

யுத்தமில்லாத இலங்கையில் ....
சத்தமில்லாமல் வீசும் சுதந்திரக்காற்றை சுவாசித்து யாவரும் சுகம் பெறுவோம் .....
சிறை வாசகம் செய்து வரும் சிறை கைதிகளுக்கு விடுதளைச்சட்டம் கொண்டுவரும் ஆண்டாக மலரட்டும் .....
பதினான்கு நாட்கள் பசியோடு தூக்கமிழந்து தவித்தவன் என் அண்ணன்
வளரும் கனவுகளில் ஒரு சில நிஜங்கள் நிலைபெறும் வருடமாக அமையட்டும் .....
,,,,,,,க.வி.முஃசீன்,,,,,,,,,

Wednesday, 11 March 2009

ஒரு ரயில் பிரயாணம்

அவள் வெள்ளைச்சிரிப்பில் வெண்மதி வலுவிழந்து ....
ராத்திரிச்சாலை ரசியமாயி நழுவிக்கொண்டிருந்தது ...
அது ஒரு ரயில் பிரயாணம் ,
அவளை கண்டதும் கனவுகள் என்னை தலுவிக்கொண்டிருந்தது ........
ஓடும் ரயிலில் என் ஓரப்பார்வை ......
தன் தங்கையோடு சில்லறை முத்தங்களிட்டுக்கொடிருந்த ஒரு சிவந்த மங்கை அவள் ..........
தூக்கம் தொலைந்தது போன அந்த இரவில் எனக்குள் துடினமாயி அரங்கேறிய கனவுகள் ஏராளம் ......
அவள் விழிகளை பார்த்து பார்த்து என் இருதயம் மௌன வாசகம் வரைந்துகொண்டிருந்தது ....
அவள் முகத்திரைக்கெதிரில் என் முழு விம்பம் அழிந்துகொண்டிருந்தது ......
என் விழிகளை பாழ்படுத்திய பருவ மங்கையவள் .......
....க.வி.முஃஸின் ....

Tuesday, 20 January 2009

காதல் .......

இதயங்களின் இடப்பெயர்ச்சி ....
உன் இதயத்தில் என் இதயத்தின் குடியேற்றம் .....
மனங்களின் சங்கமம் .....
மனங்கள் சம்மதித்தால் இதயம் இடமாறிக்க்கொள்ளும்....
உணர்வுகளின் பரிமாற்றம் ......

என்னவளே !.....
என் இதயத்தில் புதிதாக மலர்ந்த மல்லிகை மலரடி நீ .....
மல்லிகை இதழ்களில் மடி சாய்த்து உறங்கும் மன்மதன் நான் .....
ஒரு கணம் உன்னை நினைக்கையில் என் உள்ளத்தில் கோடி வார்த்தைகளின் கொண்டாட்டம் ......
கவிஎழுத நினைக்கிறேன் ......
அனால் உன் முகம் பார்க்கவில்லை ..
ஆதலால் முழு மதி பார்த்து முகவரி எழுதுகிறேன் ........
அடி மனதில் உன் பெயரெழுதி இதயத்தால் உன்னை காதலிக்கிறேனம்மா ......
.............கவி.முஃஸின் ..............

Friday, 16 January 2009

தென்றலும் மயங்கியதே அவன் தேகமும் அழிந்ததே ....

அவள் மலர் விழிகளை பார்த்து ...
அவன் மடி மீது துவண்டு விழுகிறது தென்றல்......
அவள் நாசியை நேசிக்கும் அவன் மீது பாசமான தென்றல்
அவள் பாவி மனதை படம்பிடித்து மூச்சையானதே ....
அதனால் வேதனைப்பட்ட அவன் ...
காதலையிழந்து கடைசியில் கல்லறையானான் .......
...க.வி.முஃஸின் ......

Tuesday, 13 January 2009

கிளிநொச்சி மக்களுக்காக......

கிளிநொச்சிப்பக்கம் என் விழிகளை திருப்பியபோது ...
வெடிகுண்டு ஓசையினால் செவியிழந்த ஒரு தென்றல் காற்று ...
எங்கள் கிராமத்திற்கு ஓடோடி வந்தது எங்கள் செவிகளுக்கு தேதி சொல்கிறது ...
உயிரருந்த உடல்களிலிருந்து உறையாத ரத்தங்களால் பூமி குளிகின்றதாம் ...
பச்சை நிறைந்த நொச்சி நிலங்களில் உள்ள நன்நீரெல்லாம் கண்ணீரால் வென்நீராகிரதாம்.....
அழுகுரல் அங்கே மக்கள் அணியும் ஆடைகளாகிறதாம்......
காட்டில் புலிகள் ஒருபக்கமும் மேட்டில் சிங்கங்கள் ஒருபக்கமும் விளையாட ...
அப்பாவி மக்கள் அழிந்து மடிவது இன்னொரு பக்கமாம் .......
என் நண்பன் அரவிந்தன் அல்லல் படுவது அடுத்த பக்கமாம் .....
......க.வி.முஃஸின்......

Friday, 9 January 2009

தாய்மையிட்கு நான் கொடுக்கும் தனித்துவம் ....

farewell of her is more dangerous than the feeling of dead,
thoughts of her is much better than the heaven,and who is she?
she is that ur loving mother.

என் விழிகள் வழி மாறினாலும் ....
உன் தாய்மையிலிருந்து தடுமாராதம்மா .....
தமிழை உஊட்டி என்னை தரித்தவளே ....
கோடான கோடி வார்த்தைகளால் உன்னை வணங்குகின்றேன் .....
க. வி முஃஸின்

Thursday, 8 January 2009

பாலஸ்தீன மக்களுக்காக ...

என் உள்ளத்திலிருந்து விழித்தெழும் வீரவாத்தைகள் ....
மலரே உன் மௌனத்தால் ..
என் மடி மீது உதிர்ந்து விழுகிறது உன் உயிர் ....
வெறியர்கள் பிஞ்சு இதழ்களை உடைக்கையில் ....
விழும் ரத்தத்தில் என் தேகம் சிலிர்த்து என் இளமை கொதிக்கிறது....
என்று பூமி புஉரிக்கின்றது .......
தேகம் சிலிர்த்து சித்தம் துடி துடித்து ...
ரத்தத்தில் விளையாடும் குழந்தைகள் ஏராளம் அங்கே.
இலையுதிர்காலத்து இலைகளைப்போல் உயிரருந்த உடல்களின் பரம்பல் ஏராளம் ..
தன் முன்னே தன் பிள்ளளைகள் தலையறுந்து கிடக்க தவிக்கும் தாயினது சோகம் ஓராயிரம் ..........
இவ்வாறிருக்க .....
இரும்பு கவசங்கள் அணிந்து இறுமாப்புடன் உயிர்களை நக்கி நகையாடும் ...
இஸ்ரேலிய நாயிகாளின் அனாச்சாரம் அரங்கேருகின்றதே .....
க .வி . முஃஸின்