Tuesday 13 January 2009

கிளிநொச்சி மக்களுக்காக......

கிளிநொச்சிப்பக்கம் என் விழிகளை திருப்பியபோது ...
வெடிகுண்டு ஓசையினால் செவியிழந்த ஒரு தென்றல் காற்று ...
எங்கள் கிராமத்திற்கு ஓடோடி வந்தது எங்கள் செவிகளுக்கு தேதி சொல்கிறது ...
உயிரருந்த உடல்களிலிருந்து உறையாத ரத்தங்களால் பூமி குளிகின்றதாம் ...
பச்சை நிறைந்த நொச்சி நிலங்களில் உள்ள நன்நீரெல்லாம் கண்ணீரால் வென்நீராகிரதாம்.....
அழுகுரல் அங்கே மக்கள் அணியும் ஆடைகளாகிறதாம்......
காட்டில் புலிகள் ஒருபக்கமும் மேட்டில் சிங்கங்கள் ஒருபக்கமும் விளையாட ...
அப்பாவி மக்கள் அழிந்து மடிவது இன்னொரு பக்கமாம் .......
என் நண்பன் அரவிந்தன் அல்லல் படுவது அடுத்த பக்கமாம் .....
......க.வி.முஃஸின்......

No comments: